துடிப்பு
கண்கள் கொண்டு
காதல் வாங்கினேன்...
"தீ" என்று அறியாமல்... !?
கடைசி துடிப்பு...
அடங்கிக் கொண்டுள்ளது..
மெளனமாக - அவள்..
எரியுமோ.... எரியாதோ..
முடிவு தெரியாததனால்..
கடைசி நினைவாக....
கண்கள் கலங்குகின்றது
உருவங்கள் தெரியவில்லை
தேடுகின்றது - அவளை
மனது...
நினைவு தப்பிவிட்டது
நித்திரை தழுவிவிட்டது
நாளை என்கிறாள் - அவள்....
கடைசி மூச்சிலாவது
சொல்ல மாட்டாளா ....? - ஏன்
பிரிந்தாள் - என்னைவிட்டு...??
மனுவேந்தன்
|
உயிர்
கண்கள் என்றிருந்தேன்
கனவில் கூட
வரவில்லை....
இதயம் என்றிருந்தேன்
காற்றாக கூட
வரவில்லை....
உயிர் என்றிருந்தேன்
மூச்சாக கூட
வரவில்லை...
சகாப்தம் படைக்க..
காத்திருந்தேன்..
நிசப்தத்தில் - தொலைந்து விட்டேன்.....!!
மனுவேந்தன்
|
சந்திப்பு
அன்பே....
என்றோ நிகழ்ந்த
சந்திப்பில்..
எதையோ தொலைத்துவிட்டேன் - நான்
காலங்கள்.....
கரைந்தாலும்
ஞாபகங்கள் - கரைய
மறுக்க - நான்
எதையோ தொலைத்துவிட்ட
நினைவினிலே...
எப்பொழுது...
சந்திப்பேன் - உன்னை
தொலைந்துபோன - என்
நினைவுகளை மீட்டெடுக்க - உன்னை
எப்பொழுது சந்திப்பேன்...?
மனுவேந்தன்
|
அவளுக்கோர் கடிதம்
என் உயிர் என்னும்
உயில் கடிதம்
என் வாழ்க்கையெனும்
யுகத்தை இயக்கும்
கடவுளான -என்
காதலிக்கு ஒரு
கடிதம்.......
என்னுள் நீ நலம்
உன்னுள் நான் நலமா..?
மன்னிக்கவும்..!
உன்னுள் நான் இருக்கிறேனா?
இமயமாய் இருந்த என்னைப்
பனித்துளிப் பார்வையால்
துரும்பாகச் சுருக்கியவளே
மெளனம் என்னும்
கல்லெறிந்து - மனதினை
உடைத்தவளே...
நீ இல்லா -என்
வாழ்வில்
காலங்கள் கரையமறுத்து..
இரவுகள் உறங்க மறுக்கின்றன.. - இன்றாவது
எனக்கு நிம்மதியான
நித்திரை கொடு..... - உன்
கனவுகளை கொடுத்து.....!
என் எண்ணங்களை...
ஏடுகளில் பதிந்து...
ஏக்கமுடன் ஏவிடுவேன் - உனக்கு
விருப்பமில்லை என்று கூறி..
கிழித்து விடாதே
அவை...... - என்
இதயத்தின்
இராகங்கள்..... - என
பதிவுகளை...
என்னிடமே அனுப்பிவிடு
அந்தோணி
|
நினைவுகள்..
உருவங்கள் உனக்கு ஒழுங்காய் படைத்த இறைவன்
உண்மையான உள்ளத்தை படைக்க மறந்துவிட்டான்...
எத்தனைமுறை நடந்தாலும் அத்தனை பாதச் சுவடுகளையும்
அழிக்கும் கடல் அலையாய் உன் இதயம்.....
உன்னால் உயிரற்று போன என் இதயத்தில் - வலிகள்
மட்டுமில்லை உன் நினைவுகளும் போக மறுக்கிறது....
பிறந்த குழந்தைக்கு தெரியாது தான் பிறந்திருப்பது..
இறந்தவனுக்கு தெரியாது தான் இறந்திருப்பது..
அதுபோலத்தான் எனக்கும் தெரியாது உன்னை பிரிந்திருப்பது...
வெளியில் உன்னை வெறுத்தாலும், மானசீகமாகப்
பேசிக்கொள்கிறேன் என்னை ஆக்கிரமித்த - உன்
மெளன நினைவுகளுடன்.....
ரூபி |
|