இதயம்
என் இதயமே....
எங்கே சென்றாய்...
எத்தனையோ இடங்கள் எனக்குள் இருக்க..
எங்கே சென்றாய் ... எங்கே சென்றாய் - என்
இதயமே....!?
என் இதயமே...
நான் உனக்காக...
தவமிருக்க - என்
தவத்தினை கலைத்துவிட்டு
எங்கே சென்றாய் .. எங்கே சென்றாய் - என்
இதயமே....!?
நான்..
உன் வரவுகளுக்காக..
கதவுகளை திறந்து வைத்து
விழிகளை மூடாமல்..
கள்வனாய் விழித்திருக்க..
என் இதயமே...
எங்கே சென்றாய்.. எங்கே சென்றாய் - என்
இதயமே....!?
மனுவேந்தன்
|
கனவுகள்...
கனவுகாணுங்கள்...
கனவுகாணுங்கள்...
என்றார் - அக்னிபுத்திரன்..
நானும் காணுகின்றேன்
கனவுகளை...
என் எண்ணங்கள் ஏற்றம் பெறும் என்று..
நானும் காணுகின்றேன்
கனவுகளை...
என் இந்தியா
வளம் பெறும் என்று...!?
எத்தனை எத்தனையோ...
ஜாதிகளை சொல்லி...
ஜதிகள் சேரவிடாமல்..
மனித நேயத்தை மாய்த்து விட்ட
மனிதர்களிடம்...
நல்லதொரு மாற்றம் வரும் - என்று
நானும் காணுகின்றேன்..
கனவுகளை......
எண்ணங்களை ஏற்றமாக்க
நினைத்து.....
ஏணிப்படிகளை தேடி..
ஏக்கங்கள் மட்டுமே...
ஏமாற்றமாக நின்று விட -நான்
கனவு காணுகின்றேன்..
பகல் கனவு காணுகின்றேன்..!
மனுவேந்தன்
|